follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2டெங்கு பரவலை கட்டுப்படுத்த விரிவான வேலைத்திட்டம்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த விரிவான வேலைத்திட்டம்

Published on

மேல் மாகாணத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக அலுவலகங்கள் வளாகங்களை சோதனை செய்வதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திங்கட்கிழமைகளில் – தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரவெனாக்கள் சோதனைக்குட்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை – தொழிற்சாலைகளும்
புதன்கிழமை – நிர்மாணங்கள் முன்னெடுக்கப்படும் வேலைத்தளங்களும்
வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும்.

வௌ்ளிக்கிழமைகளில் ஏனைய அரச நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் மேல் மாகாண உப குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்

ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் பழுதுபார்க்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர்...

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...