follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறைமை?

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறைமை?

Published on

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

இந்நாட்டின் முறைசாரா வகையில் தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு கௌரவம் அளித்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக அவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் “கரு சரு” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் சந்தை தொடர்பான தகவல் கட்டமைப்புடன் அவர்களை இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை அதிகரிப்பதற்காக, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர் சங்கம், ஸ்மார்ட் கிளப் வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தொழில்முறை வழிகாட்டல் நடவடிக்கைகள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுதிப்பத்திர முறைமையை அறிமுகம் செய்தல் தொடர்பான விடயங்களை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற முடிந்ததாகத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலுக்காக வெளிநாட்டு செல்வோருக்காக விமான நிலையத்தில் தனியான பிரிவை அமைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் பணம் இலங்கைக்கு அந்நிய செலாவணி பெறுவதற்கான முக்கியமான மூலங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையிலான அமைச்சின் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன், புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தொழிலாளர் சட்டங்களை திருத்த எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...