follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் வீதி

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் வீதி

Published on

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக உடவலவ அணைக்கட்டு ஊடாக வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை பல கட்டங்களாக வீதி மூடப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 15ஆம் முதல் 22ஆம் திகதி வரை குறித்த வீதி முற்றிலும் மூடப்படும் என்றும், டிசம்பர் 23ஆம் முதல் ஜனவரி 6ஆம் திகதி வரை ஒரு வழிப்பாதையும் மூடப்படும் எனவும் ஜனவரி 7ஆம் முதல் ஜனவரி 14ஆம் திகதி வரை முற்றாக மூடப்படும் என்றும், ஜனவரி 15ஆம் திகதி வீதி முழுவதுமாக போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி மூடப்படும் காலப்பகுதியில் உடவலவ தொடக்கம் எம்பிலிப்பிட்டிய வரையான 13ஆம் தபால் நிலையம் வரையான வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...