follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகாம்பியா நாட்டு முறையில் முந்திரி பயிர்ச்செய்கை

காம்பியா நாட்டு முறையில் முந்திரி பயிர்ச்செய்கை

Published on

முந்திரி பயிர்ச்செய்கையில் காம்பியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க இலங்கையின் காம்பிய தூதுவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போன்று சிறிய விவசாய நாடாக காம்பியா காணப்பட்டாலும் கடலை, முந்திரி போன்ற பல பயிர்களில் தன்னிறைவு பெற்றுள்ளதாக இலங்கைக்கான காம்பிய தூதுவர் முஸ்தபா ஜவாரா விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.

காம்பியாவில் விளையும் முந்திரி பருப்பு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக வருமானம் ஈட்டுகிறது காம்பியாவின் ஆற்றங்கரைகளின் இருபுறமும் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

புதிய வகை முந்திரி இனங்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்காததே இந்நாட்டில் முந்திரிச் செய்கை வீழ்ச்சிக்குக் காரணம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். எனவே, காம்பியாவில் முந்திரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு காம்பியா தூதுவரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...