follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்WhatsApp பதிவுக்காக பாகிஸ்தான் இளைஞருக்கு மரண தண்டனை

WhatsApp பதிவுக்காக பாகிஸ்தான் இளைஞருக்கு மரண தண்டனை

Published on

வாட்ஸ்அப் செய்திகள் மூலம் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பான தீர்ப்பை வழங்கிய பஞ்சாப் மாகாண நீதிமன்றம், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே வழக்கில் மற்றொரு 17 வயது இளைஞருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் அவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்பே கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எதிரான முறைப்பாடு 2022 இல் பஞ்சாபின் தலைநகரான லாஹூரில் உள்ள பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் (எஃப்ஐஏ) சைபர் கிரைம் பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வார தீர்ப்பில், முகமது நபி மற்றும் அவரது மனைவிகளைப் பற்றி அவதூறான வார்த்தைகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்ததற்காக 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவற்றை பரிமாறியதற்காக மற்றைய பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...