follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் உருவாக்கியுள்ள வரட்சியைத் தாங்கக் கூடிய இரண்டு அரிசி வகைகள்

இலங்கையில் உருவாக்கியுள்ள வரட்சியைத் தாங்கக் கூடிய இரண்டு அரிசி வகைகள்

Published on

வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம், காலநிலை நீதிக்கான மன்றம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுதல் மற்றும் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள காலநிலை செழிப்புத்திட்டம் என்பவற்றின் ஊடாக தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை காலநிலை பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நெல்லுக்கான நகலிகளை (குளோனிங்) உருவாக்குவதற்கு சுமார் 25 வருடங்கள் தேவைப்படுவதாகவும், இலங்கையில் வறட்சியைத் தாங்கும் இரண்டு அரிசி வகைகளை உருவாக்கியுள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பில் காணப்படும் கவலையை சமாளிப்பதற்குத் தொழில்நுட்பத்தின் அவசியமும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தினார்.

மோசமான கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 34 வீதமாகக் குறைந்ததுடன், அந்நியச் செலாவணி இல்லாத நிலையிலும் அரிசியை இறக்குமதி செய்யததாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...