follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுநீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் சதி - சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என...

நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் சதி – சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என கோரிக்கை

Published on

நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் திட்டமிட்ட குழுவினரால் வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதிக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று இந்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் இருந்த வாகனங்களும் எரியூட்டப்பட்டுள்ளன.

இருந்தாலும் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்களே இதனை செய்திருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் தற்போது மக்களை வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இனவாதத்தை தூண்டும் வகையில் சில தரப்பினர் முயற்சித்துள்ளனர் இந்நிலையில், இந்த சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...