follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயமாக்க அமைச்சரவை பத்திரம்

அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயமாக்க அமைச்சரவை பத்திரம்

Published on

வெசாக் பண்டிகையுடன் இணைந்து மாணவர்களுக்கு
அறநெறி (தம்ம) பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பான அமைச்சரவை பாத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம், அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு, அவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தனிமனிதர்களிடையே பொறுமை, ஒழுக்கம், மதத்தின் மீது பற்று இல்லாமை போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து நல்வாழ்வு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்துடன், அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவுத்திறனும் விருத்தி செய்யப்படவுள்ளதுடன், பிரசங்கம், தியானம் உள்ளிட்ட தம்மால் புரிந்துணர்வை பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் வழங்கவுள்ளனர்.

பிள்ளைகள் அறநெறி பாடசாலைக் கல்வியிலிருந்து விலகிச் செல்வதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...