காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த நிலை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என்பன பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தாலும், தற்போது 460 மருத்துவர்களே உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.