follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி, போர் வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்

பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி, போர் வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்

Published on

மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எல்டீடீஈ பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாக, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அந்த புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மெகசின் சிறைச்சாலையில் இருந்தேன். நான் ரிமாண்டில் இருந்த நேரம் அது. 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி அவர்கள் திட்டமிட்டு மன்னிப்பதிலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை.

மறுபுறம், போர்வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர். ஜனாதிபதி இந்த மக்களுக்கு மன்னிப்பு வழங்கினால், அது இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் இந்த அத்தியாயத்தை மூட வேண்டும். புலி பயங்கரவாதிகளுக்கு மட்டும் மன்னிப்பை மட்டுப்படுத்த முடியாது.

போர் வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், ஜனாதிபதி அவர்களை மன்னித்து இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை…”

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...