follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

Published on

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். சமாதானமான மற்றும் சுபீட்சமான இலங்கைக்கு அவசியமான 6 முக்கிய விடயங்கள் அடங்கிய “இமயமலைப் பிரகடனம்” இங்கு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அனைத்து சங்க அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 2023 ஏப்ரல் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்தப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

நேபாளத்தில் ஏப்ரல் 2023 இல் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த வெளியீடு தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், தேசிய ஒருமைப்பாட்டினூடாக வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு திறந்த மனதுடன் இந்த முயற்சியில் கலந்துகொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாத் தெரிவித்தார். இந்தத் தேசிய செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...