follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்கடும் நிதி நெருக்கடி - GoFirst நிறுவன விமானங்கள் இரத்து

கடும் நிதி நெருக்கடி – GoFirst நிறுவன விமானங்கள் இரத்து

Published on

போதுமான பணம் இல்லாமையினால் மே 3 மற்றும் 4 ம் திகதிகளுக்கு விமானங்களை இரத்து செய்யப் போவதாக Go First நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோ பர்ஸ்ட் நிறுவனம், நாட்டின் கட்டணம் குறைந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த நிறுவனம் சேவையாற்றி வருகிறது.

தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோ பர்ஸ்ட் நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்றாடம் செலுத்த வேண்டிய தொகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பணம் செலுத்தாவிட்டால் கோ பர்ஸ்ட் நிறுவன விமானங்களுக்கு எண்ணெய் வழங்கப்படாது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனையடுத்து நிலைமை கைமீறி போனதைத் தொடர்ந்து மே 3 மற்றும் 4-ம் திகதிகளுக்கு அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக கோ பர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...